பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு.
பராஅத், பராத், ஷஃபே பராத், ஷஃபே பராஅத், பாக்கியம் நிறைந்த இரவு.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
حمِ
ஹா, மீம். (44:1)
ஹா, மீம். (44:1)
وَالْكِتَابِ الْمُبِينِِ
வல் கிதாபில் முபிய்ன்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! (44:2)
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَِ
இன்னா அன் ஜல்னாஹு ஃபிய் லைலத்தின் முபாரக்கத்தின் இன்னா குன்னா முந்திரிய்ன்
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். (44:3)
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍِ
ஃபிய்ஹா யுஃப்ரஹு குல்லு அம்ரின் ஹக்கிய்ம்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. (44:4)
(குர்ஆன் 44:1, 2, 3, 4.)
இந்த ஆயத்தின் விளக்கத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் சரியான விளக்கத்தை அல்லாஹுவே அறிவான்.
இந்த ஆயத்தில் பராஅத் இரவைப் பற்றியே அல்லாஹ் சொல்வதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்
لِكُلِّ أَجَلٍ كِتَابٌِ
يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ ۖ
லி குல்லி அஜலின் கிதாப்
யம்ஹு ல்லாஹு மா யஷாஉ வ யுஸ்பித்
“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான்.
(அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது”
(அல் குர்ஆன். 13:38,39).
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا ۖ
ஹுவல்லதிய் க்ஹலக்ககும் மின் திய்னிய்ன் ஸும்ம களயா அஜளன்
“அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை
(வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு”
(அல் குர்ஆன். 6:2)
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىِٰ
عَبْدًا إِذَا صَلَّىِٰ
அர அய்தல்லதிய் யன்ஹா
அபதன் இஜா ஸல்லா
“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?”
(அல் குர்ஆன்: 96:9,10)
فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
ஃபஸ்தபிகுல் க்ஹய்ராத்
“நன்மைகளை செய்வதில் இறை அருளைப் பெறுவதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 2:148.
وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا
வ ஸாரிஉ இலயா மக்ஃபிரத்தின் மின் ரப்பிக்கும் வ ஜன்னத்தின் அர்ளுஹா
“உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்கத்துக்கும் விரைந்துசெல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 3:133
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ
மன் ஜாஅ பில் ஹசனத்தி ஃபலஹு அஷ்ரு அம்ஸலிஹா
“எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).
மேற்கூறப்பட்ட ஆயத்துகள் அனைத்தும் இந்த இரவுக்கும் அதன் செயல்களுக்கும் தொடர்புடயவை.
ஒன்றும் செய்யாமல் நேரத்தை வீணாக்குவதை விட அமல்களில் கவனம் செலுத்துவது சிறந்த செயலாகும்.
பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
“ஷஃபான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்”
என்று அறிவித்த அண்ணலார் (ﷺ) அவர்கள் இதில் விதி விலக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செய்பவர்கள்
பராஅத் இரவு பரக்கத் பொருந்திய இரவு.
பராஅத் இரவில்தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும்
பராஅத் இரவில்தான் அவர் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்படும்.
பராஅத் இரவில்தான் அவர் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும்.
பராஅத் அன்று நோன்பு வைப்பது நஃபிலான அமல்.
நிஸ்ஃபு ஷஃபான் என்றால், ஷஃபானின் பாதி அதாவது 15 வது இரவு, பராஅத் இரவு, என்றால் விடுதலை இரவு
இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு,
லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது,
கடமையில்லாத விரும்பத்தக்க நல்ல செயல்கள்
மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.
இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.
பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது.
அன்று பகலில் நோன்பு வைப்பது.
ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்
ஆடுகளின் ரோமங்களின் அளவு மக்கள் அல்லாஹ்வால் நரக விடுதலை அளிக்கப்படுவார்கள்
“குர்’ஆன் ஓதி அதைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்”. நபி மொழி பதிவு திர்மிதி 2917. மிஷ்காத் 2210.
“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).
“குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” புகாரி
“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்”
இப்னு அப்பாஸ் (ரலி)
பராஅத் துவா: நீ எங்களைப் பாக்கியவான்களாக ஆக்கி அதை அப்படியே உறுதிப்படுத்துவாயாக.
கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில நன்மையான விஷயங்கள் அதை மாற்றும்.
Thanks to: Internet Friends
07-08-1442 AH ஷாபான் abdulmalick2(at)gmail.com 21-03-2021 CE
No comments:
Post a Comment