.

...

 


Print Friendly, PDF & Email

 

Sunday, February 21, 2021

துவா செய்ய பழகிக் கொள்வோம்.

 துவா செய்ய பழகிக் கொள்வோம்.

துவா என்றால் பிரார்தனை, வேண்டுதல், தேவைகளை கேட்டுப் பெருதல் என்று பொருள்படும்.
இறைவனுக்கு உரிய கடமைகளைச் செய்தபின் செய்ய வேண்டிய ஒரு அமல்.

துவா ஒரு வணக்கமாகும்.

செருப்பின் வார் அறுந்து விட்டால் கூட அல்லாஹ்விடம் துவா செய்ய வேண்டும்.

துவாவை அதற்குறிய முறையில் செய்ய வேண்டும்.

துவா எப்படி செய்வது?
அதையும் இறைவனே நமக்கு கற்றுத் தருகிறான்.

நம் குழந்தைகளுக்கு துவா செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் பெற்றோர்களுக்காக செய்யும் துவாவை இறைவன் உடனே ஏற்றுக் கொள்கிறான்.

அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.
கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
கைகளை உயர்த்திக் கேட்க வேண்டும்.


எளிமையான முறை
1. அல்லாஹ்வைப் புகழ்வது.
2. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
3. இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்து ஒரே துவா செய்வது.
4. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
5. அல்லாஹ்வைப் புகழ்வது.

உதாரணமாக‌

லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ்.

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதா பன்னார்.

வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மா யஸிஃபூன் வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.



விரிவான முறை
1. அல்லாஹ்வைப் புகழ்வது.
2. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
3. ஈமானை பலப்படுத்துதல்.
4. தனக்காகவும், மற்ற அனைவர்களுக்காவும் பாவ மன்னிப்பு தேடுதல்.
5. சக்கராத்து மற்றும் கப்று அதாபுகளை விட்டு பாதுகாப்பு தேடுதல்.
6. கேள்விக்கணக்கு  நாளை எண்ணி பாதுகாப்பு தேடுதல்.
7. உலகத்தின் செயல்களுக்கு பாதுகாப்பு தேடுதல்.
8. உறவினற்களுக்காக துவா செய்தல்.
9. நம‌க்கு உதவியவர்களுக்காக துவா செய்தல்.
10. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
11. அல்லாஹ்வைப் புகழ்வது.

உதாரண‌மாக‌

லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

ரப்பனா லா துஆஹித்னா இன்னஸிய்னா அவ் அஹ்தஹ்னா
ரப்பனா வலா தஹ்மில் அலைய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லதிய்ன மி கப்லினா
ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி 
வ அஃபு அன்னா
வக் பிர்லனா
வர் ஹம்னா
அன்த மவ்லானா
ஃபன்சுர்னா
அலல் கவ்மில் காஃபிரிய்ன் (அல்குர்ஆன் 2: 286)

ரப்பனா லா துஜிய் குலுவ்பனா பஅத இத் ஹதய்தனா வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மத்தன் இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்  (அல்குர்ஆன் 3: 8)

ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வ இன் லம் தக்ஃபிர்லனா வ தரஹம்னா லனக்கூனன்ன மினல் ஹாஸிரிய்ன் (அல்குர்ஆன் 7: 23)

இன்னிய் வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லஜிய் ஃபதரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனிய்ஃபன் வமா அனா மினல் முஷ்ரிகிய்ன் (அல்குர்ஆன் 6: 79)

ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ அலைய்ஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளிய்ம் (அல்குர்ஆன் 9: 129)

லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னிய் குன்து மினள் ளாலிமிய்ன். (அல்குர்ஆன் 14: 38)

ரப்பி ஜஅல்னிய் முகிய்மஸ் ஸலாத்தி வ மின் துர்ரிய்யத்திய் ரப்பனா வ தக்கபல் துஆ
ரப்ப‌னக் ஃபிர்லிய் வலி வலி வாலிதய்ய வலில் முக்மினிய்ன யவ்ம யகூமுல் ஹிஸாப் (அல்குர்ஆன் 14: 40, 41)

ரப்பிர் ஹம்ஹுமா கமா ரப்ப யானிய் ஸகிய்ரா (அல்குர்ஆன் 17: 24)

ரப்பிஷ் ரஹ்லிய் ஸத்ரிய் வ யஸ்ஸிர்லிய் அம்ரிய் (அல்குர்ஆன் 20: 25, 26)

ரப்பி ஜித்னிய் இல்மா (அல்குர்ஆன் 20: 114)

ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜிய்னா வ துர்ரிய் யாத்திய்னா குர்ரத்த அயுனின் வஜ்அல்னா லில் முத்தகிய்ன இமாம‌ (அல்குர்ஆன் 25: 74)

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகிய்னா அதாபன்னார் (அல்குர்ஆன் 2: 201)

ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அந்த ஸமிய்உல் அளிய்ம்.
வ துப் அலைனா இன்னக்க அந்தத் தவ்வாபுர் ரஹிய்ம். (அல்குர்ஆன் 2: 127-128)

வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மாயஸிஃபூன்.
வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமிய்ன். (அல்குர்ஆன் 37: 180, 181, 182)



இன்னும் ச‌ற்று விரிவான முறையில் தமிழில் துவா

லகல் ஹம்து லக சுக்ரு யா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்.

அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

யா அல்லாஹ் 

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.
உன்னை அதிகம் அதிகமாக புகழக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகமாக ஸலவாத்து சொல்லக்கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்ககூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
தொழுகையை உள்ளச்சத்தோடு உன்னில் லயித்து தன்னை மறந்து அந்த உயிருள்ள தொழுகையைத் தொழுகக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
நோன்புகளை பரிபூரணமாக நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
ஜக்காத்தை முழுமையாக  நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
ஹஜ்ஜை நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
உம்ராவை  நிறைவேற்றக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

நாயகம் (ஸல்) அவர்களை கனவிலும் நனவிலும் தரிசனம் செய்யக்  கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

என்னுடயை பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் தாய் தந்தையர் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் மனைவி, மக்கள் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் உற்றார் உறவினர் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
என் ஆசிரியர்கள் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.

உலகில் உள்ள உண்மையான முஸ்லிம்கள், முஃமின்கள் உடைய‌ பாவங்கள் ..அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.

இறந்த என் முன்னோர்கள் உடைய‌ பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.
அவர்களுடைய கப்ரை விரிவாக்குவாயாக.
அவர்களுடைய வேதனையை நீக்கி அருள்வாயாக.
அவர்களுடைய கப்ரின் பக்கம் சொர்க்கத்தின் காற்றை திறந்து விடுவாயாக.
அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆடையை அணிவிப்பாயாக.

வயது முதிர்ந்த முதுமைப் பருவத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

சக்கராத்துடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கப்றுடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கேள்விக் கணக்கை இலேசாக்குவாய் ரஹ்மானே.
மறுமை நாளில் உன்னுடைய அர்ஷ் உடைய நிழலில் எங்களுக்கு இடம் கொடு ரஹ்மானே.
நாயகம் (ஸல்) அவர்கள் கரங்களால் கவ்லுல் கவ்தர் நீரைப் பருகக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

யா அல்லாஹ்
நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தெடுகிறேன்.
சொர்க்கத்தை உன்னிடம் ஆதரவு வைக்கிறேன்.
ஸிராத்துல் முஸ்தகிய்ம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பதற்கு அருள் செய்வாய் ரஹ்மானே.
சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நானும், என் குடும்பத்தினர் அனைவரும் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து இருக்க கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

கடனில்லாத வாழ்க்கையை கொடு ரஹ்மானே
வட்டியில்லாத‌ வாழ்க்கையை கொடு ரஹ்மானே
நோயில்லாத‌ வாழ்க்கையை கொடு ரஹ்மானே
ஹலால் ஹராமை பேணி நடக்க‌ கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.

பொய் சொல்வதை விட்டும், கோள் சொல்வதை விட்டும், பொறாமை கொள்வதை விட்டும், தற்பெருமையை விட்டும், ஆணவத்தை விட்டும், திமிரை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.

ஷைத்தான், நஃப்ஸு, மனிதர்கள், ஜின்கள், பூச்சிகள், விலங்குகள் மற்றும் அனைத்து விதமான தீங்குகளை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறேன்.

குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடிய பாக்கியத்தைத் தருவாயாக.
குர்ஆனை மனனம் செய்யக் கூடிய‌ பாக்கியத்தைத் தருவாயாக
குர்ஆனை எங்களுக்கு கப்ரில் ஒளியாகவும், மறுமையில் எங்களுக்காக ஷஃபாத்து செய்யக் கூடியதாகவும் ஆக்குவாயாக.
குர்ஆனை கொண்டு எங்கள் நோய்களுக்கு ஷிஃபா தருவாயாக.

என் சகோதர சகோதரிகளுக்கு உடல் நலத்தைக் கொடு ரஹ்மானே.
அவர்களுடைய ஹலாலான தேவைகளை நிறைவேற்றிக் கொடு ரஹ்மானே.

உன்னை வணங்குவதற்கு எனக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களுடைய பாங்களை எல்லாம் மன்னித் தருள்வாயாக.
அவர்களுடைய வணக்கங்களின் குறைபாடுகளை நீக்கி பரிபூரண வணக்கங்களாக ஏற்றுக் கொள்வாயாக.

இந்த துவாக்கள் அனைத்தையும் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரக்கத்தினால் ஏற்று நிறைவேற்றிக் கொடுப்பாயாக.

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகிய்னா அதாபன்னார் (அல்குர்ஆன் 2: 201)

ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அந்த ஸமிய்உல் அளிய்ம்.
வ துப் அலைனா இன்னக்க அந்தத் தவ்வாபுர் ரஹிய்ம். (அல்குர்ஆன் 2: 127-128)

வ ஸல்லல்லாஹு தஆலா வ ஸல்லமலா கைய்ரி கல்கிகி சைய்யதினா முஹம்மதின் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின்.

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜத்தி அம்மாயஸிஃபூன்.
வ ஸலாமுன் அலல் முர்ஸலிய்ன்.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமிய்ன். (அல்குர்ஆன் 37: 180, 181, 182)



Thanks to: 

09-07-1442 AH, Rajab                               abdulmalick2(at)gmail.com                                   21-02-2020 CE

Monday, February 8, 2021

அறிவோம் இஸ்லாமிய மாதங்களை

அறிவோம் இஸ்லாமிய மாதங்களை

 

நாம் ஆங்கில மாதங்களை மனனம் செய்து வைத்துள்ளோம்.
இஸ்லாமிய மாதங்களை மனனம் செய்ய தவறிவிட்டோம்.
 
இதை மனனம் செய்வது மிகவும் எளிது.
 
முதலில் 
 
இரண்டு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
நான்கு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
நான்கு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். பிறகு
இரண்டு மாதங்களை மனனம் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
 
இன்ஷா அல்லாஹ் மனனம் ஆகிவிடும்.
 
1. முஹர்ரம்3. ரபியுல் அவ்வல்7. ரஜப்11. துல்கஅதா
2. ஸஃபர்4. ரபியுல் ஆகிர் (ரபியுஸ் ஸானீ)8. ஷாபான்12. துல்ஹஜ்
 5. ஜுமாதுல் அவ்வல்9. ரமலான் 
 6. ஜுமாதுல் ஆகிர்(ஜமாதிஸ்ஸானீ )10. ஷவ்வால் 
 
இது வெயில் காலம்
இது மழை காலம்
இது குளிர் காலம்
என்னால் நோன்பு வைக்க முடியாது என்று பழிபோட்டு தப்பிப்பவர்கள் அடுத்த வருடமாவது நோன்பை விடாமல் வைக்க இறைவன் கொடுத்த வாய்ப்பு இந்த பிறை மாதக் கணக்கு.
 

 

 

நாம் நம்முடைய பிறந்த நாளை ஆங்கில கணக்குப்படிதான் நினைவு கொள்கிறோம்.

இனி முதல் இஸ்லாமிய முறைப்படி பழகிக்கொள்வோம்.

முதலில் நம்முடைய பிறந்த நாளுக்கு இணையான ஹிஜ்ரி தேதி, மாதம், வருடத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்கு இங்கே செல்லவும். அல்லது என்னைத் தொடர்பு கொள்ள‌வும்.
https://islam-tamilil.blogspot.com/2021/01/best-converter-from-gregorian-to-hijri.html

அதன் பிறகு வரும் ஹிஜ்ரி ஆண்டு முதல் அதே மாதம், தேதியில் நாம் நம் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.

ஏனென்றால்  ரம்ஜான், பக்ரீத், மிலாடிநபி, ஷஃபே பராத், ஷஃபே மெஹ்ராஜ் மற்றும் அனைத்து  முக்கிய நாட்களுக்கும் ஹிஜ்ரி மாதம், தேதி தேவைப்படுகிறது. அதைப் போன்று நம்முடைய பிறந்த, திருமண நாட்களையும் மற்ற முக்கிய நாட்களையும் ஹிஜ்ரியில் கொண்டுவந்து விட வேண்டும்.

மேலும் தினசரி ஆங்கில தேதியை நாம் பார்த்து பழகுவது போல் இன்று என்ன ஹிஜ்ரி மாதம், எத்தனையாவது பிறை என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஹிஜ்ரி காலண்டரை தினமும் உபயோகிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

இன்றைய ஹிஜ்ரி நாள் எத்தனையாவது பிறை?

இது என்ன மாதம், வருடம் என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
https://islam-tamilil.blogspot.com/2021/01/hijri-date-today-in-tamil.html

 
 
 
 
ஒவ்வொரு மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
 
புனித மாதங்கள் ( Sacred Months )
முஹர்ரம்
ரஜப்
துல்ஹதா
துல்ஹஜ்

நோன்பு அய்யாமுல் பிட்த் ( Ayyamul Bidh )

மாதத்தின் மூன்று நோன்புகள் வைக்க சிறந்த நாட்கள்.

ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறை 13, 14, 15
 
முதல் மாதம் முஹர்ரம்
1.முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு.
ஹிஜ்ரத், புலம் பெயர்தல், மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த மாதம்.
10 மூஸா (அலை) அவர்களுக்கு  அல்லாஹ் ஃபிர்அவுனிடம் இருந்து வற்றியை கொடுத்த நாள்.
10 கர்பலா யுத்தத்தில் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதான நாள்.
9, 10, 11 முஹர்ரம் ஆஷுரா 2 நாள் நோன்பு
 
இரண்டாம் மாதம் ஸஃபர்
பொறுமையின் மாதம். வெற்றியின் மாதம்.
ஸ‌ஃபர் மாதத்தின் கடைசி புதன் ஒடுக்கத்து புதன்
 
மூன்றாம் மாதம் ரபியுல் அவ்வல்
12 ரபி உல் அவ்வல் மவ்லித் ( பிறப்பு ) மீலாடி நபி, நபி (ஸல்) அவர்கள் பிறந்த, நினைவு தினம்
 
நான்காம் மாதம் ரபியுல் ஆகிர் (ரபியுஸ் ஸானீ)
11 ரபி உல் ஆகிர் இறைநேசர் மஹ்பூபே சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் நினைவு தினம்.
 
 
ஐந்தாம் மாதம் ஜுமாதுல் அவ்வல்
 
 
ஆறாம் மாதம் ஜுமாதுல் ஆகிர்(ஜமாதிஸ்ஸானீ ) 
 
 
ஏழாம் மாதம் ரஜப்
27 ரஜப் - புனித மெஹ்ராஜ், மிஃராஜ், விண்ணேற்றத்தின் மாதம்.
 
எட்டாம் மாதம் ஷாபான்
15 ஷாபான் ஷபே பராத் இரவு
23 ஷாபான் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் பிறந்த நாள்
 
ஒன்பதாம் மாதம் ரமலான்
1 ரமலான் - முதல் நோன்பு,
17 ரமலான் - நூஸுல் குர்ஆன், பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம் 
21, 23, 25, 27, 29 ரமலான் கடைசி 10 ரமலானில் ஐந்து ஒற்றைப்படை இரவில் ஒரு நாள் - லைலத்துல் கத்ர்,
 
பத்தாம் மாதம் ஷவ்வால்
1 ஷவ்வால் - நோன்பு பெருநாள், ரமலான் பண்டிகை, ஈதுல் ஃபித்ர்
 
பதினொன்றாம் மாதம் துல்கஅதா
 
 
பன்னிரெண்டாம் மாதம் துல்ஹஜ்
8-10 துல்ஹஜ் - ஹஜ் செய்யும் நாட்கள்,
9 துல்ஹஜ் அரஃபா நாள்
10 துல்ஹஜ் - ஹஜ் பெருநாள், பக்ரீத் பண்டிகை, ஈதுல் அல்ஹா
 
 
மற்ற சில முக்கிய நாட்கள்
17 ரபிய்யுல் ஆகிர் டெல்லி ஹஜ்ரத் நிஜாமுத்தீன் வலியுல்லாஹ் கந்தூரி
15 ஜமாதுல் அவ்வல் குணங்குடி மஸ்தான் வலியுல்லாஹ் கந்தூரி
10 ஜமாதுல் ஆகிர் நாகூர் கந்தூரி
6 ரஜப் அஜ்மீர் காஜா முயினுத்தீன் சிஷ்தி கந்தூரி
14 ரஜப் தக்கலை பீர் முஹம்மது வலியுல்லாஹ் கந்தூரி
23 துல்ஹதா ஏர்வாடி இப்ராஹிம் வலியுல்லாஹ் கந்தூரி
3 துல்ஹஜ் அடையார் குராசானி பீர் கந்தூரி
15 துல்ஹஜ் தமீமுல் அன்சாரி (ரலி) கந்தூரி
25 துல்ஹஜ் எழும்பூர் மோத்தி பாபா கந்தூரி
 
 
 
 
 
விரிவான குறிப்புகள்
சூரிய மறைவிற்கு பிறகு ஹிஜ்ரி நாள் ஆரம்பமாகிறது.
அதனால்தான் ரமலான் பிறை பார்த்த அன்றே முதல் தராவிஹ் தொழுகையைத் தொழுகிறோம்.
இஸ்லாத்தில் இரவுதான் ஒரு நாளின் ஆரம்பம். இன்றைய மஃரிப்லிருந்து நாளைய அஸர் வரை ஒரு முழு நாள் கணக்கிடப்படுகிறது.
உதாரணத்துக்கு ஷஃபே பராத் இரவு, மெஹ்ராஜ் இரவு, லைலத்துல் கத்ர் இரவு போன்றவை.
 
 
குரானில் இதைப்பற்றி அல்லாஹ் பின்வரும் ஆயத்துகளில் கூறுவதைப் பாருங்கள்.
 
 (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. அல்குர்ஆன் 2:189
 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 9:36.
 
அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன் அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 9:37
 
'அவன்தான் சூரியனை சுடரொளி மிக்கதாகவும், சந்திரனை தன்னொளியாகவும் ஆக்கினான். இன்னும் நீங்கள் ஆண்டுகளின் (மாதங்கள், நாட்களின்) எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்கு பல மன்ஜில்களையும் (தங்குமிடங்களையும்) அவன் ஏற்படுத்தினான். அல்லாஹ் உண்மை(யாகத் தக்க காரணம்) கொண்டே தவிர இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு (த் தன்னுடைய) அத்தாட்சிகளை இவ்வாறே விவரிக்கிறான்'. –(யூனுஸ்: 5) 
 
நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது 9:108
 
 
முற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி 638 CE  அன்று நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நெருங்கிய சகாபா மற்றும் இரண்டாவது கலிபாவான உமர் பின் கத்தாப் அவர்களால், அவர் காலத்தில் இருந்த பல்வேறு நாட்காட்டி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர அறிமுகப்படுத்தபட்டது.

அல்குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது… அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன் 2 : 185)

ஹஜ்(ஜுக்குரிய காலம்) அறியப்பட்ட மாதங்களாகும். அதில் ஹஜ்ஜை தம் மீது விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது வீடு கூடுவதோ கொள்வதோ, பாவம் செய்வதோ, வீண் தர்கம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2 : 197)

 

ஹதீஸில் இதைப்பற்றி கூறுவதைப் பாருங்கள்.

ரமளான் நோன்பிற்கு அடுத்த சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாத (ஆஷுரா) நோன்பாகும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1982)

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மட்டும்தான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்க நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம் 1956)

ரமளானில் நோன்பு நோற்று பிறகு அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார். (அறிவிப்பவர் : அபூ அய்யூப் -ரலி, நூல் : முஸ்லிம் 1984)

 

சில தகவல்கள்
 
உமர்(ரழி), அறிஞர்களுடன் கலந்தாலோசித்து இஸ்லாமிய காலம் கணக்கிடும் முறையை ஹிஜ்ராவிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.
 
ஹிஜ்ராவின் முதல் மாதமாகிய முஹர்ரமின் முதல் நாளிலிருந்து இஸ்லாமிய நாளேட்டை துவக்குவதாகவும் முடிவு செய்யபட்டது.
 
முஹர்ரம் 1, 1 ஹிஜ்ரி என்பது ஆங்கில நாளேட்டில் ஜுலை16, 622 C.E. குறிக்கிறது.
 
01-01-0001AH = 16-7-0622CE,AD
 
AH = After Hijri
AD = After Death of Jesus Christ as per christian.
CE = Christian Era
BC = Before Christ.
 
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரா என்பது, நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியாகும்.
 
ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களை கொண்டது.
 
இஸ்லாமிய நாளேடு சந்திரனை அடிப்படையாக கொண்டதினால், ஆங்கில நாட்காட்டியைவிட 11 நாட்கள் குறைவானது.
 
ஒரு வருடம் 354 அல்லது 355 நாட்களை கொண்டது.
 
மாதங்கள் காலங்களை அடிப்படையாக கொண்டு இல்லை.
 
ஆகையால், முஸ்லிம் பண்டிகைகள் வெவ்வேறு காலங்களில் வரும்.
 
எடுத்துக்காட்டாக நோன்பு பெருநாள் வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் வரும்.
 
ஹிஜ்ரி மாதம் ஆரம்பம், முதல் பிறை மட்டும் அடிப்படையாக அல்லாமல், அந்தந்த இடங்களில் கண்ணால் பிறை பார்பதையும் அடிப்படையாக கொண்டுள்ளது.
 
ஆகையால் உலகம் முழுவதும் அச்சிடப்பட்ட ஹிஜ்ரி நாளேடுகளில் ஒரு சில நாட்கள் வித்தியாசம் இருக்கலாம்.
 
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு மாதம் அதிகரிக்கிறது.
 
36 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர ஆண்டு ஒரு வருடம் அதிகரித்து விடுகிறது.
 

Thanks to: http://www.tamililquran.com/hijri.asp

abdulmalick2(at)gmail.com 

29-06-1442 AH  ஜமாத்துல் ஆகிர்                                                                                                                                                         12-02-2021  CE

...

 


Print Friendly, PDF & Email

 

"அறிவோம் இஸ்லாமிய மாதங்களை" 

Sunday, February 7, 2021

நாம் யார்? எதற்காக இறைவன் நம்மை படைத்தான்?

 நாம் யார்? எதற்காக இறைவன் நம்மை படைத்தான்?


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

40:62

ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَِ

​தாலிகு முல்லாஹு ரப்புகும் க்ஹாலிகு குல்ல ஷய்யின் லா இலாஹ இல்லாஹு
ஃப அன்ன யா துவ்ஃபகூன்

அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?


நாம் இறைவனின் உயர்ந்த படைப்பு.

இறைவனை வணங்குவதற்காக படைத்தான்.


மற்ற அனைத்து படைப்புகளும் பகுத்தறிவு இல்லாதது.

மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உண்டு.


உதாரணமாக ஒருவன் மாடு வளர்க்கிறான். தினமும் அதை அடித்து வேலை வாங்குகிறான். 

ஒரு நாளாவது அந்த மாடு யோசித்தது உண்டா? இல்லையே.


இந்த பகுத்து அறியும் சிந்தனை அறிவை இறைவன் மனிதனுக்கு கொடுத்ததாலேயே மனிதன் படைப்புகளில் உயர்தவனாகிறான்.


நாம் சுயமாக உருவாகவில்லை.

நம்மை ஒருவன் உருவாக்கி இருக்கிறான்.


ஒரு கார் தொழிற்சாலையில் தானாக உருவாவதில்லை.

மனிதனின் கட்டளைப்படிதான் உருவாகிறது.


நம்மை உருவாக்கியவனே இறைவன். 

அவன் தான் அல்லாஹ்.


சுயமாக எதையும் நாம் விளங்கி கொள்ள முடியாது.

ஆசிரியரின் உதவி இருந்தால்தான் விளங்கி கொள்ள முடியும்.


மருத்துவ புத்தகத்தை மட்டும் வைத்துக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யமுடியாது.

அது விபரீதமாகிவிடும்.


பிறந்த குழந்தை உணவுக்காக தன் தாயிடம் செல்ல முடிவதில்லை.

அவனுக்கு உதவி தேவைப்படுகிறது.


மற்ற ஜீவராசிகள் அப்படியில்லை.

ஒரு சிறு உதவி செய்த மனிதனே நன்றியை எதிர்பார்க்கிறான்.

ஒருவன் தன் நண்ப‌னுக்கு மணமுடிக்க பெண் பார்க்க உதவி செய்தான். 

இங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்று கைகாட்டினான். 

அவ்வளவுதான் அதற்கு காலம் முழுவதும் சொல்லிக் காட்டி அதன் நன்றியை எதிர்பார்க்கிறான். 

மேட்ரிமோனியலில் எத்தனையோ வரன்கள் கிடைக்கின்றன. அதற்கு சிறு தொகைதான். 

அத்தோடு அது முடிந்து விடுகிறது.

அவர்கள் நன்றியை எதிர்பார்ப்பதில்லை.


தனி ஒரு மனிதன் உதவிக்கான நன்றியை காலம் முழுவதும் எதிபார்க்கிறான்.


ஒரு சிறு உதவிக்கே இவ்வளவு நன்றி தேவைப்படும் போது நமக்கு எவ்வளவோ அருள் செய்த ரஹ்மானுக்கு  நாம் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும்.


தம் வாழ்வின் ஒவ்வொரு நேரமும் நமக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நாயகம்(ஸல்) அவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த வேண்டும். 


இறைவன் மனிதனைப் படைத்ததான்.

இந்த உலகத்தையே மனிதனுக்காக படைத்தான்.

நாம் அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?


Wednesday, February 3, 2021

21.11.11

அல்-குர்ஆனை அறிவோம் "மேலும், 'அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் 'அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்' என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்" (அல்-குர்ஆன் 2:170-171) நபிமொழி அறிவோம் "அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி. http://suvanathendral.com/portal/?cat=316 -- A.M.Abdul Malick

Monday, February 1, 2021

Tamil Quran words easy search

Arabic Quran with English / Tamil Translation

எளிமையான முறையில் குரானில் வார்த்தைகளை தேட‌.......!

உதாரணம் :  அல்லாஹ், இறைவன், இப்ராஹீம், மழை, முகம், வானம், நரகம், 

Tanglish Typing: allah, IRaivan, ibraahiim, mazhai, mugam, vaanam, naragam,

Browse / Search Quran or Translation (English / Tamil) - Chittarkottai.com

குர்ஆன் தமிழாக்கம் அரபி மூலத்துடன் தேட
(Browse Quran in Arabic with Tamil Translation)

அத்தியாயம்

வசன எண்

OR

வசன எண் (உம் 2:124)

 

குர்ஆன் தமிழாக்கத்தில் சொல் தேடல்

Select the Sura Tanglish Typing OR Unicode typing

 

...

தமிழ் குர்ஆன் தமிழாக்கம் அரபி மூலத்துடன் தேட
(Browse Quran in Arabic with Tamil Translation)

 சூரா (அத்தியாயம்)எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்

சூரா Chapter

...

abdulmalick2atgmail.com

Thanks to Chittarkottai.com

உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam

... உணவு உண்ணும் முறைகள் (இஸ்லாம்) Food Discipline in Islam Your browser should support iFrame to view this PDF document abdulm...